டிரிபோலி விமான நிலையத்தில் அந்த விமானம் தரையிறங்கும்போது, திடீரென நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் அந்த விமானத்தில் பயணம் செய்த 105 பேரும் பலியானதாக முதலில் தெரிவிக்கப்பட்டது.
100 க்கும் அதிகமான பயணிகளுடன் வந்த லிபிய விமானம் ஒன்று டிரிபோலி விமான நிலையத்தில் இன்று விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த 8 வயது சிறுவன் மட்டும் அதிசயமாக உயிர் பிழைத்துள்ளான்.
ஆனால் அந்த விமானத்தில் பயணித்த 8 வயது சிறுவன் ஒருவன் காயத்துடன் அதிசயமாக உயிர் பிழைத்துள்ளதாகவும், அருகிலுள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
விமானம் எதனால் விபத்துக்குள்ளானது என்பது குறித்த விவரம் இன்னும் தெரியவரவில்லை
0 comments:
Post a Comment