சிலி தலைநகர் சான்டியாகோவில் போக்குவரத்து ‘சிக்னல்’ விளக்குகளை கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்பட்ட கம்ப்யூட்டர்களை சில கொள்ளைக்காரர் கள் திருடிச் சென்றுவிட்டனர். இதனால் அங்கு போக்குவரத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டது.
போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்துக்குள் கதவை உடைத்துப் புகுந்த கொள்ளைக்காரர்கள், அங்கிருந்த 17 கம்ப்யூட்டர்களை திருடிச் சென்றுவிட்டனர்.
அவற்றில், பிரதான சாலைகளில் போக்கு வரத்து ‘சிக்னல்’களை கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்பட்ட கம்ப்யூட்டர்களும் அடக்கம். ஐம்பது லட்சத்துக்கும் மேற்பட் டோர் வசிக்கும் இந்நகரில் பெரும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. போக்குவரத்து சிக்னல்களை மறுபடி முழுமையாகச் சரிப்படுத்த மூன்று நாட்களாயின.
உங்கள் வீட்டுத் தோட்டத்தில்
பொதுவாக எல்லா இடங்களிலும் காணப்படும் போகன்வில்லாவை யாரும் பாலைவனத்துடன் இணைத்துக் கற்பனை செய்திருக்க மாட்டார்கள். படரும் கொடி வகைத் தாவரமான இதைத் சுவர் அல்லது வேலியின் மீது படர வைக்கவோ புதர் வடிவில் உருவாக்கவோ முடியும்.
இதன் சில வகைகள் மஞ்சள் அல்லது பச்சை நிறக் கிளைகளைக் கொண்டிருப்பதால் நில அலங்காரத்துக்கு இது மிகவும் ஏற்றதாகும். தவிர இவை பொன்னிறம் முதல் இளஞ் சிவப்பு, ஊதா, சிவப்பு என்று பல வண்ணங்களில் ஆண்டுக்கு நான்கு முறை மலர்கின்றன.
ஏறக்குறைய எல்லா தோட்டங்களிலும் காணப்படும் போகன்வில்லா பாலைவனத்திலிருந்து வெற்றிகரமாக நாட்டுக்குள் இடம்பெயர் ந்ததாகும். தாவரங்களைக் கொண்டு வேலியை உருவாக்குவதில் பயன்படுத் தப்படும் மற்றொரு தாவரம் குறிப்பாக இந்தியாவில் லான்டானா ஆகும். இந்த உறுதியான தாவரம், வறட்சியைத் தாக்குப் பிடிக்கக் கூடியதாகும். இது ஏறக்குறைய ஆண்டு முழுவதும் மலர் கிறது.
இதன் பூக்கள் பல்வேறு வண் ணங்களில் பூக்கின்றன. இது படரக் கூடியதாக உள்ளது. இதை அவ்வப்போது வெட்டி ஒழுங்குபடுத்துவது முக்கிய மானதாகும். இதன் பழங்கள் சிறிய ‘பிளாக் பெர்ரியைப் போல இருக்கின்றன. இவை, இத்தாவரத்துக்கு ஒரு கூடுதல் அலங்காரத் தன்மையை அளிக்கின்றன.
அழகு என்ற விதத்தில் பார்த்தால் ‘பெர்ரி டஸ்டர்’ தாவரத்துடன் மிகச் சில தாவரங்கள்தான் போட்டியிட முடியும். இதன் பூக்கள் சிவப்பு அல்லது இளஞ் சிவப்பு நிறத்தில் தூரிகை வடிவில் ‘துடைப்பான்’ போல இருக்கின்றன. தேவதைகள் இவற்றைத் தங்கள் வீடு களில் பயன்படுத்திக் கொள்ளும் என்பது மக்களின் நம்பிக்கை. இத்தாவரத்தின் அறிவியல் பெயர் ‘கலியாண்ட்ரா’வாகும்.
இந்தத் தாவரம் 1.2 மீட்டர் உயரம் வரை வளரும். வாரம் ஒருமுறை தண்ணீர் விட்டால் போதும். இது புதர் போன்ற தோற்றத்தைக் கொண்டிருக்கும். மேலும் நாம் தோட்டங்களிலும், வீடுகளை ஒட்டி யும் காணும் தாவரங்களான ஒலியாண்டர், யெல்லோ பெல்ஸ், பெர் பேர்டு ஆப் பாரடைஸ், ஆரஞ்சு ஜூபிலி மற்றும் பாம்பாஸ் புற்களும் உண்மையில் பாலைவனத் தாவரங்களாகும்.
மூளைக்கு அதிக வேலை கொடுத்தால் சிந்திக்கும் திறன் இழக்கும் அபாயம்
இன்றைய நிலையில் மூளைக்கு அதிக மான தகவல்களை நிரப்பி வைப்பதால் மனிதர்கள் ஆழ்ந்து சிந்திக்கும் திறனை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. எங்கும் எதிலும் கம்ப்யூட்டர் மயமாகி விட்ட இக்காலத்தில் தகவல் தொடர்பு அதிகரித்து, மக்கள் ஏராளமான விஷய ங்களை தெரிந்துகொள்கின்றனர்.
குறிப் பாக, தொலைக்காட்சி, இன்டர்நெட், இ-மெயில் உள்ளிட்ட பல ஊடகங்கள் மூலம் தினசரி ஒரு இலட்சம் வார்த்தைகள், அதாவது ஒரு வினாடிக்கு 23 வார்த் தைகளை மூளைக்குள் திணிக்கின்றனர்.
கடந்த 1980 ம் ஆண்டில் 4 ஆயிரத்து 500 டிரில்லியன் வார்த்தைகள் மூளைக் குள் செலுத்தப்பட்டன. ஆனால் 2008ம் ஆண்டில் 10 ஆயிரத்து 845 டில்லிய னாக உயர்ந்துவிட்டது. இது 1980ம் ஆண்டை விட இரு மடங்குக்கும் அதிகம். இந்த கணக்கில் மக்கள் சாதாரணமாக உரையாடும் பேச்சு இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டில் கம்ப்யூட்டர், தொலைக்காட்சி, மற்றும் ஊடகங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்களில் மொத்த அளவு 3.6 ஜெட்டாபைட்ஸ் (3.6 எம். என்., மில்லியன் கிகாபைட்ஸ்) என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இது குறித்து கம்ப்யூட்டர் மொழியில் கூறுவதென்றால் தினசரி 34 கிகாபைட்ஸ் மனித மூளைக்குள் திணிக்கப்படுகிறது. இது ஒரு வாரத்தில் லெப் டாப் கம்ப்யூட்டரில் செலுத்தப்படும் வார்த்தைகளின் எண்ணிக்கைக்கு இணையானது. தொடர்ந்து அதிகமான தகவல்கள் திணிக்கப்படுவதால் மூளையில் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது என்று கலிபோர்னியாவில் உள்ள சாண்டியாகோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
சாண்டியாகோ பல்கலைக்கழக துணை பேராசிரியர் ரோகர் பான் கூறுகையில் :-
அதிக தகவல்களை திணிப்பதால் குறைந்தபட்ச இடைவெளி நேரத்தில் மூளை சோர்வடைந்து விடுகிறது. இதனால் ஆழ்ந்து சிந்திப்பது தடைப்படுகிறது என்கிறார். பரபரப்பாக கம்ப்யூட்டரை இயக்கவும், மொபைல் போனில் பேசவும், ரிவி பார்ப்பதிலும் ஆர்வம் காட்டும் தற்காலத்தில் மக்கள், அதற்காக அதிக நேரம் செலவு செய்கின்றனர்.
அதிகமாக சிந்திப்பதற்கும், உணர்வதற்கும் அவர்கள் நேரம் ஒதுக்குவதில்லை. மொத்தத்தில் தற்காலத்தில் உள்ளது போல முன் எப்போதும் இந்த அளவிற்கு மனித மூளைக்கு வேலை கொடுத்ததில்லை. இது பாதிப்பை ஏற்படுத்தும் என்று நியூயோர்க்கில் உள்ள மனநோய் மருத்துவர் எட்வர்டு ஹாலோவெல் தெரிவிக்கிறார்.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் கற்றதை விட தற்போது மக்கள் அதிகமாக கற்றுக்கொள்கின்றனர். இதனால் மூளையை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. மூளையின் அளவு அதிகரிப்பது அதை பயன்படுத்துவதை பொறுத்தது.
மூளையில் புதிய செல்கள் பிறப்பதும், புதிய நரம்பு இணைப்புகள் கிடைப்பதும், ஒவ்வொருவரின் தனிப்பட்ட அனுபவங்களின் வாயிலாக கிடைக்கும் நிகழ்வுகளுக்கு ஏற்ப இருக்கும் என்று ஒக்ஸ் போர்டு பல்கலைக்கழக நரம்பியல் பேராசிரியர் காலின் பிளாக்மோர் கூறுகிறார்.
நன்றி தினகரன்
0 comments:
Post a Comment