24 January 2010

கம்ப்யூட்டர் பிரச்னைகளும் காரணங்களும்

0 comments
கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் அது இயங்கத் தொடங்கும் முன்பாகவே கம்ப்யூட்டர்
முடங்கிப் போகலாம். ஆனால் முடங்கிப் போவது அனைத்து நேரங்களிலும் நடக்காது.
இங்கு சில வழக்கமான எர்ரர் செய்திகளும், அவற்றிற்கான காரணங்களும் இங்கு
தரப்படுகின்றன:


1. மானிட்டரின் எல்.இ.டி. விளக்கு விட்டு விட்டு எரிகிறது: இதற்குக்
காரணம் எங்கேனும் இணைப்பு விட்டுப் போய் இருக்கலாம். மானிட்டர் கேபிள்,
டேட்டா கேபிள், ராம் மெமரி, டிஸ்பிளே கார்ட் மற்றும் சிபியு தொடர்புகளில்
பிரச்சினை இருக்கலாம். மேலே கூறிய அனைத்தையும் சரி பார்க்கவும்.

2. தொடர்ந்து மூன்று பீப் ஒலி கேட்கிறது: ராம் மெமரி சிப் தொடர்பில்
கோளாறு இருக்கலாம். எனவே அவை சரியாக அதன் ஸ்லாட்டில் பொருந்தியுள்ளனவா
எனப் பார்க்கவும். மற்ற பிரிவுகளைச் சோதனை செய்கையில் இவை சற்று இடம்
பெயர்ந்திருக்கலாம்.

3. மூன்று பீப் – ஒன்று நீளமாக, இரண்டு குறைவாக: இந்த ஒலி கிடைத்தால்
டிஸ்பிளே கார்டில் பிரச்சினை. இந்த கார்டை ஒரு முறை எடுத்து திரும்ப
பொருத்தவும். பிரச்சினை தொடர்ந்தால் இதனை மாற்ற வேண்டிய திருக்கும்.

4. மூன்று நீளமான பீப் ஒலி, சம கால இடைவெளியில்: பயாஸ் அல்லது ராம்
செட்டிங்ஸ் பிரச்சினை. ராம் சிப் மற்றும் பயாஸ் செட்டிங்ஸ் செக்
செய்திடவும்.

5. தொடர்ந்த பீப் ஒலி: கீ போர்டு பிரச்சினை. எடுத்துக்காட்டாக உங்கள்
விரல்கள் ஏதேனும் தொடர்ந்து ஒரு கீயை அழுத்திக் கொண்டிருக்கலாம்; அல்லது
ஏற்கனவே அழுத்தப்பட்ட கீ, தூசி அல்லது வேறு பிரச்சினையால், மேலே எழாமல்
அழுத்தப்பட்ட நிலையிலேயே இருக்கலாம்.

6. பிளாப்பி டிஸ்க் டிரைவின் எல்.இ.டி. விளக்கு தொடர்ந்து எரிகிறது:
டேட்டா கேபிள் மாட்டியதில் சிக்கல் உள்ளது. கேபிள் முறுக்கப்பட்டுள்ளதா
என்று பார்க்கவும்.

7. மானிட்டர் திரையில் எந்த டிஸ்பிளேயும் இல்லை: ஹார்ட் டிஸ்க் கேபிள்
தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது. சரியாகப் பொருத்தவும். அதில் உள்ள சிகப்பு
மார்க் பவர் சப்ளையைப் பார்த்து இருக்க வேண்டும்.

8. பவர் எல்.இ.டி. எரியவில்லை: மெயின் பவர் வரும் வயர் சரியாகப் பொருந்தி
உள்ளதா எனப் பார்க்கவும். எஸ்.எம்.பி.எஸ். சரியாக வேலை செய்கிறதா எனச்
சோதிக்கவும். மதர் போர்டுக்கான இணைப்பும் சரியாக இருக்க வேண்டும்.

[size=12]9.CMOS Error [/size]என்று செய்தி வருகிறது:
மதர் போர்டில் உள்ள 3 வோல்ட் பேட்டரியினை மாற்றவும்.
அதன் ஒரிஜினல் செட்டிங்ஸை நீங்களே கொண்டு வரவும். இதற்கு கம்ப்யூட்டருடன்
தரப்பட்ட சீமாஸ் செட் அப் சார்ட் பார்க்கவும்.

[size=12]10. FDD Error [/size]காட்டுகிறது,
பிளாப்பி டிரைவ் சரியாகச் செயல்படவில்லை: எப்.டி.டி.யின் பவர் கார்ட்,
டேட்டா கேபிள் சரியாக அதன் இடத்தில் பொருத்தப்பட்டுள்ளதா என்று
பார்க்கவும். சீமாஸ் செட்டிங்ஸ் சரி பார்த்துவிட்டு பிளாப்பி டிரைவும்
சரியாக உள்ளதா என்று கவனிக்க வேண்டும்.

11. HDD Error or Hard Disk Failure என்று செய்தி வருகிறது.
பவர் தரும் கேபிள் சரியாகப் பொருத்தப் பட்டுள்ளதா என்று பார்க்கவும். ஒரு முறை எடுத்து, இணைக்கும் இடத்தில் உள்ள தூசியினை நீக்கிப் பொருத்திப் பார்க்கவும். ஹார்ட் டிஸ்க் சரியாகப் பொருத்தப்பட்டுள்ளதனை உறுதி செய்திடவும். ஹார்ட் டிஸ்க்கிற்கான டேட்டா
கேபிளையும் ஒரு முறை எடுத்து, சுத்தம் செய்து மீண்டும் இணைக்கவும். சீமாஸ்
செட்டிங்ஸில் ஹார்ட் டிஸ்க் பாராமீட்டர்கள் சரியாகக் கொடுக்கப்பட்டுள்ளதா
எனச் சோதனை செய்திடவும். அல்லது செட்டிங் பார்ட்டிஷனை சோதனை செய்திடவும்.
இதற்கு எப்டிஸ்க் (FDisk) கட்டளை கொடுத்து பின் ட்ரேக் 0 ஆக பார்மட் செய்திடவும்.

12. சரியான மின்சாரம் இல்லாமல் மதர் போர்டு திடீரென முடங்குகிறது:
எஸ்.எம்.பி.எஸ். செக் செய்திடவும். அல்லது ராம் மெமரி சரியாக வேலை
செய்கிறதா என்பதைச் சோதனை செய்திடவும். உங்கள் சாப்ட்வேர் காப்பி
செய்யப்பட்டது என்றால், அதிலிருந்தும் பிரச்சினை ஏற்படலாம். சி.பி.யு.
மேல் உள்ள சிறிய விசிறி சரியாகச் செயல்படவில்லை என்றாலும் இந்த எர்ரர்
காட்டப்படும்.

13. மானிட்டரின் ஸ்கிரீன் காட்சி ஆடுகிறது: டிஸ்பிளே கார்டு சரியாகப்
பொருத்தப்பட்டுள்ளதைச் சோதிக்கவும். ஏதேனும் வைரஸ் புரோகிராம் உள்ளே
புகுந்தும் இந்த வேலையைச் செய்திடலாம். அல்லது வீடியோ மெமரியில் பிரச்சினை
இருக்கலாம்.

14. திரைக் காட்சி அதிர்கிறது: மானிட்டரைச் சுற்றி ஏதேனும் காந்த அல்லது ரேடியோ அலைகள் உருவாகலாம்.

15. சி.பி.யு. கேபினட்டில் லேசாக ஷாக் அடிக்கிறது: கம்ப்யூட்டருக்கான மின்
இணைப்பின் எர்த் இணைப்பு சரியில்லாமல் இருக்கலாம். எனவே மெயின் பவர்
கேபிளைச் சோதிக்கவும்.

16. Non System Disk Error: :
பிளாப்பி டிரைவில் பூட் பண்ண முடியாத வேறு டிஸ்க் இருக்கலாம். அல்லது
ஹார்ட் டிஸ்க்கிற்கான சீமாஸ் செட் அப்பில் தவறு இருக்கலாம். ஹார்ட்
டிஸ்க்கில் பார்ட்டிஷன் உருவாக்கப்படாமல் இருக்கலாம். ஹார்ட் டிஸ்க்
பார்ட்டிஷன் பார்மட் செய்யப்படாமல் இருக்கலாம்.
[size=12]17. Missing Operating System: [/size]சிடம் இயக்குவதற்கான பைல்கள் இல்லாமல் இருக்கலாம் – குறிப்பாக Command.com என்னும் பைல். இதனுடன் [size=12]IO.sys, MS_DOS.sys [/size] ஆகிய பைல்களும் ஒரு சிஸ்டம் இயங்க முதல் தேவைகளாகும். இவை சரியாக உள்ளனவா என்று பார்க்கவும்.

18. Missing Command Interpretor: Command.com பைல் கரப்ட் ஆகி இருக்கலாம். அல்லது வைரஸ் பாதித்திருக்கலாம். அல்லது அழிக்கப் பட்டிருக்கலாம்.

19. IO Error : சீமாஸ்
செட்டிங்ஸில் ஹார்ட் டிஸ்க் எந்த வகை என்று தரப்பட்டிருப்பது சரியாக
இல்லை. பார்மட்டிங் செய்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட ஆப்பரேட்டிங் சிஸ்டம்
சரியானதல்ல.
[size=12]

20.Divide Over Flow [/size]எர்ரர் மெசேஜ்: சில டைரக்டரிகள் அல்லது பைல்கள் கிராஷ் ஆகி இருக்கலாம். [size=12]CHKDSK/F[/size] அல்லது SCANDISK பயன்படுத்தி அவற்றைச் சரி செய்திடவும்.

21. செயல்படுகையில் ஹார்ட் டிஸ்க்கிலிருந்து சத்தம் வருகிறது: சீரான மின்சாரம் தரப்படவில்லை. கேபிள்கள் சரியாகப் பொருத்தப்படவில்லை. ஹார்ட் டிஸ்க்குகளில் ஙு கனக்டர் கேபிள் பொருத்தப்பட்டிருந்தால் எடுத்துவிட்டு சரியான கேபிளைப் பொருத்தவும்.
ஹார்ட் டிஸ்க் பலவீனமாக இருக்க வேண்டும். அல்லது பெரும் அளவில் பேட் செக்டார்கள் ஏற்பட்டிருக்க வேண்டும்.

22. ஹார்ட் டிஸ்க் ப்ராசஸ் செய்கையில் முடங்கி நிர்ர்கிர்றது:
[size=12]CHKDSK/F[/size]அல்லது [size=12]SCANDIS[/size] பயன்படுத்தி பேட் செக்டார்களைச் சோதனை செய்திடவும். நிறைய இருந்தால் மீண்டும் ஹார்ட் டிஸ்க்கினை பார்மட் செய்திடவும்.

23. Hard Disk Not Detected: பவர் கனெக்டர்களைச் சோதனை செய்திடவும். டேட்டா கேபிள்களைச் சரி பார்க்கவும். ஜம்ப்பர்களைச் சோதனை செய்திடவும்.

24. ஹார்ட் டிஸ்க் பார்ட்டிஷன் காட்டப்படவில்லை: ஹார்ட் டிஸ்க்கை பார்மட் செய்த ஆப்பரேட்டிங் சிஸ்டம், தற்போதுள்ள மதர்போர்டுடன் இணைந்து போகவில்லை.

25. MMX/DLL FILE MISSING : இந்த பைல்கள் பவர் திடீரென நின்று போனதால் கரப்ட் ஆகி இருக்கலாம். அல்லது வைரஸ் பாதித்திருக்கலாம். எனவே இந்த பைல்களை வேறு ஒரு கம்ப்யூட்டரிலிருந்து காப்பி செய்து இதற்கு மாற்றவும். உங்களுடையது பழைய விண்டோஸ் ௯௮ ஆப்பரேட்டிங் சிஸ்டம் எனில் அதனை மீண்டும் இன்ஸ்டால் செய்திடவும்.

பொதுவாக கம்ப்யூட்டர் இயங்காமல் நின்று போய்விட்டால்,உடனே ஒரு பதற்றம்
நம்மைத் தொற்றிக் கொள்ளும். என்ன ஆச்சோ ஏது ஆச்சோ என்று பல்வேறு விதமாக
நாமாகவே எண்ணிக் கொள்வோம். அத்தகைய பதற்றத்தைத் தணிக்கவே இந்த விளக்கம்
தரப்பட்டுள்ளது. எனவே பிரச்சினையின் தன்மையைப் புரிந்து கொண்டு,உங்களால்
கம்ப்யூட்டர் கேபினைத் திறந்து சரி செய்ய முடியவில்லை என்றால் அதற்கான
டெக்னீஷியனை அழைத்து சரி செய்திடவும்.

சின்ன சின்ன தகவல்

0 comments
கொள்ளையர்களால் போக்குவரத்துக் குழப்பம்

சிலி தலைநகர் சான்டியாகோவில் போக்குவரத்து ‘சிக்னல்’ விளக்குகளை கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்பட்ட கம்ப்யூட்டர்களை சில கொள்ளைக்காரர் கள் திருடிச் சென்றுவிட்டனர். இதனால் அங்கு போக்குவரத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டது.

போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்துக்குள் கதவை உடைத்துப் புகுந்த கொள்ளைக்காரர்கள், அங்கிருந்த 17 கம்ப்யூட்டர்களை திருடிச் சென்றுவிட்டனர்.

அவற்றில், பிரதான சாலைகளில் போக்கு வரத்து ‘சிக்னல்’களை கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்பட்ட கம்ப்யூட்டர்களும் அடக்கம். ஐம்பது லட்சத்துக்கும் மேற்பட் டோர் வசிக்கும் இந்நகரில் பெரும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. போக்குவரத்து சிக்னல்களை மறுபடி முழுமையாகச் சரிப்படுத்த மூன்று நாட்களாயின.

உங்கள் வீட்டுத் தோட்டத்தில்

பொதுவாக எல்லா இடங்களிலும் காணப்படும் போகன்வில்லாவை யாரும் பாலைவனத்துடன் இணைத்துக் கற்பனை செய்திருக்க மாட்டார்கள். படரும் கொடி வகைத் தாவரமான இதைத் சுவர் அல்லது வேலியின் மீது படர வைக்கவோ புதர் வடிவில் உருவாக்கவோ முடியும்.

இதன் சில வகைகள் மஞ்சள் அல்லது பச்சை நிறக் கிளைகளைக் கொண்டிருப்பதால் நில அலங்காரத்துக்கு இது மிகவும் ஏற்றதாகும். தவிர இவை பொன்னிறம் முதல் இளஞ் சிவப்பு, ஊதா, சிவப்பு என்று பல வண்ணங்களில் ஆண்டுக்கு நான்கு முறை மலர்கின்றன.

ஏறக்குறைய எல்லா தோட்டங்களிலும் காணப்படும் போகன்வில்லா பாலைவனத்திலிருந்து வெற்றிகரமாக நாட்டுக்குள் இடம்பெயர் ந்ததாகும். தாவரங்களைக் கொண்டு வேலியை உருவாக்குவதில் பயன்படுத் தப்படும் மற்றொரு தாவரம் குறிப்பாக இந்தியாவில் லான்டானா ஆகும். இந்த உறுதியான தாவரம், வறட்சியைத் தாக்குப் பிடிக்கக் கூடியதாகும். இது ஏறக்குறைய ஆண்டு முழுவதும் மலர் கிறது.

இதன் பூக்கள் பல்வேறு வண் ணங்களில் பூக்கின்றன. இது படரக் கூடியதாக உள்ளது. இதை அவ்வப்போது வெட்டி ஒழுங்குபடுத்துவது முக்கிய மானதாகும். இதன் பழங்கள் சிறிய ‘பிளாக் பெர்ரியைப் போல இருக்கின்றன. இவை, இத்தாவரத்துக்கு ஒரு கூடுதல் அலங்காரத் தன்மையை அளிக்கின்றன.

அழகு என்ற விதத்தில் பார்த்தால் ‘பெர்ரி டஸ்டர்’ தாவரத்துடன் மிகச் சில தாவரங்கள்தான் போட்டியிட முடியும். இதன் பூக்கள் சிவப்பு அல்லது இளஞ் சிவப்பு நிறத்தில் தூரிகை வடிவில் ‘துடைப்பான்’ போல இருக்கின்றன. தேவதைகள் இவற்றைத் தங்கள் வீடு களில் பயன்படுத்திக் கொள்ளும் என்பது மக்களின் நம்பிக்கை. இத்தாவரத்தின் அறிவியல் பெயர் ‘கலியாண்ட்ரா’வாகும்.

இந்தத் தாவரம் 1.2 மீட்டர் உயரம் வரை வளரும். வாரம் ஒருமுறை தண்ணீர் விட்டால் போதும். இது புதர் போன்ற தோற்றத்தைக் கொண்டிருக்கும். மேலும் நாம் தோட்டங்களிலும், வீடுகளை ஒட்டி யும் காணும் தாவரங்களான ஒலியாண்டர், யெல்லோ பெல்ஸ், பெர் பேர்டு ஆப் பாரடைஸ், ஆரஞ்சு ஜூபிலி மற்றும் பாம்பாஸ் புற்களும் உண்மையில் பாலைவனத் தாவரங்களாகும்.

மூளைக்கு அதிக வேலை கொடுத்தால் சிந்திக்கும் திறன் இழக்கும் அபாயம்

இன்றைய நிலையில் மூளைக்கு அதிக மான தகவல்களை நிரப்பி வைப்பதால் மனிதர்கள் ஆழ்ந்து சிந்திக்கும் திறனை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. எங்கும் எதிலும் கம்ப்யூட்டர் மயமாகி விட்ட இக்காலத்தில் தகவல் தொடர்பு அதிகரித்து, மக்கள் ஏராளமான விஷய ங்களை தெரிந்துகொள்கின்றனர்.

குறிப் பாக, தொலைக்காட்சி, இன்டர்நெட், இ-மெயில் உள்ளிட்ட பல ஊடகங்கள் மூலம் தினசரி ஒரு இலட்சம் வார்த்தைகள், அதாவது ஒரு வினாடிக்கு 23 வார்த் தைகளை மூளைக்குள் திணிக்கின்றனர்.

கடந்த 1980 ம் ஆண்டில் 4 ஆயிரத்து 500 டிரில்லியன் வார்த்தைகள் மூளைக் குள் செலுத்தப்பட்டன. ஆனால் 2008ம் ஆண்டில் 10 ஆயிரத்து 845 டில்லிய னாக உயர்ந்துவிட்டது. இது 1980ம் ஆண்டை விட இரு மடங்குக்கும் அதிகம். இந்த கணக்கில் மக்கள் சாதாரணமாக உரையாடும் பேச்சு இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டில் கம்ப்யூட்டர், தொலைக்காட்சி, மற்றும் ஊடகங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்களில் மொத்த அளவு 3.6 ஜெட்டாபைட்ஸ் (3.6 எம். என்., மில்லியன் கிகாபைட்ஸ்) என்று கணக்கிடப்பட்டுள்ளது.

இது குறித்து கம்ப்யூட்டர் மொழியில் கூறுவதென்றால் தினசரி 34 கிகாபைட்ஸ் மனித மூளைக்குள் திணிக்கப்படுகிறது. இது ஒரு வாரத்தில் லெப் டாப் கம்ப்யூட்டரில் செலுத்தப்படும் வார்த்தைகளின் எண்ணிக்கைக்கு இணையானது. தொடர்ந்து அதிகமான தகவல்கள் திணிக்கப்படுவதால் மூளையில் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது என்று கலிபோர்னியாவில் உள்ள சாண்டியாகோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

சாண்டியாகோ பல்கலைக்கழக துணை பேராசிரியர் ரோகர் பான் கூறுகையில் :-

அதிக தகவல்களை திணிப்பதால் குறைந்தபட்ச இடைவெளி நேரத்தில் மூளை சோர்வடைந்து விடுகிறது. இதனால் ஆழ்ந்து சிந்திப்பது தடைப்படுகிறது என்கிறார். பரபரப்பாக கம்ப்யூட்டரை இயக்கவும், மொபைல் போனில் பேசவும், ரிவி பார்ப்பதிலும் ஆர்வம் காட்டும் தற்காலத்தில் மக்கள், அதற்காக அதிக நேரம் செலவு செய்கின்றனர்.

அதிகமாக சிந்திப்பதற்கும், உணர்வதற்கும் அவர்கள் நேரம் ஒதுக்குவதில்லை. மொத்தத்தில் தற்காலத்தில் உள்ளது போல முன் எப்போதும் இந்த அளவிற்கு மனித மூளைக்கு வேலை கொடுத்ததில்லை. இது பாதிப்பை ஏற்படுத்தும் என்று நியூயோர்க்கில் உள்ள மனநோய் மருத்துவர் எட்வர்டு ஹாலோவெல் தெரிவிக்கிறார்.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் கற்றதை விட தற்போது மக்கள் அதிகமாக கற்றுக்கொள்கின்றனர். இதனால் மூளையை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. மூளையின் அளவு அதிகரிப்பது அதை பயன்படுத்துவதை பொறுத்தது.

மூளையில் புதிய செல்கள் பிறப்பதும், புதிய நரம்பு இணைப்புகள் கிடைப்பதும், ஒவ்வொருவரின் தனிப்பட்ட அனுபவங்களின் வாயிலாக கிடைக்கும் நிகழ்வுகளுக்கு ஏற்ப இருக்கும் என்று ஒக்ஸ் போர்டு பல்கலைக்கழக நரம்பியல் பேராசிரியர் காலின் பிளாக்மோர் கூறுகிறார்.

நன்றி தினகரன்

சுட்ட தகவல்

1 comments

லேப்டாப் வாங்காமல் அவசரப்பட்டு டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் வாங்கி விட்டீர்களா?
லேப்டாப் இருந்தாலும் அதை மறந்து விட்டு வெளியே செல்கிறீர்களா? எதுவானாலும் இனி
கவலையில்லை.

இருந்த இடத்தில் இருந்து உங்கள் கம்ப்யூட்டரில் டேட்டாக்களை தொடர்பு கொள்ளும்
ஜி&டிரைவ் வசதியை கூகுள் விரைவில் அறிமுகம் செய்கிறது.

கம்ப்யூட்டர் யுகத்தில் புதிய புரட்சி ஏற்படுத்தக்கூடிய இந்த வசதி பற்றி
அமெரிக்க தொழில்நுட்ப செய்திக்கான வெப்சைட் கூறுகையில், ÔÔஉங்கள் கம்ப்யூட்டர்
ஹார்டிரைவை தூக்கி எறியுங்கள். கூகுள் ஜி&டிரைவ் விரைவில் வருகிறதுÕÕ என்கிறது.

அதாவது, நமது கம்ப்யூட்டரில் நாம் வைத்திருக்கும் அத்தனை டேட்டாக்களையும்
இன்டர்நெட்டில் கூகுள் ஏற்படுத்தித் தரும் இடத்திலும் ஸ்டோர் செய்து வைக்கலாம்.
அதன்மூலம், இருக்கும் இடத்தில் இன்டர்நெட் இணைப்புடன் கம்ப்யூட்டர் இருந்தால்
போதும். ஜி&டிரைவ் மூலம் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள டேட்டாக்களை நீங்கள்
தொடர்பு கொள்ள முடியும்.

இந்த வசதியில் இமெயில், போட்டோக்கள், இசை, தகவல் பைல்கள் என சகலமானவற்றையும்
தொடர்பு கொள்ள முடியும். கூகுள் இப்போது அளித்து வரும் வசதிகளுடன் கூடுதலாக
இந்த சேவையும் கிடைக்கப் போகிறது.
இந்த வசதி அறிமுகமாகி பிரபலமாகி விட்டால் விண்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்டம் உட்பட
இப்போதைய டெஸ்க்டாப் சிஸ்டம்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்கின்றனர்
கம்ப்யூட்டர் துறை நிபுணர்கள்.

எனினும், கூகுள் ஜி&டிரைவை நம்பி அதிகளவு தனிப்பட்ட மற்றும் வர்த்தக
டேட்டாக்களை ஸ்டோர் செய்வது சரியாக இருக்காது. உங்கள் கம்ப்யூட்டரில் இருக்கும்
அளவு டேட்டாக்களுக்கு ஜி&டிரைவில் பாதுகாப்பு கிடைக்காது என்றும் சிலர்
தெரிவிக்கின்றனர்.

இதுபற்றி தொடர்பு கொண்டபோது கூகுள் தரப்பில் கருத்து தெரிவிக்க மறுத்தனர்.
Related Posts Plugin for WordPress, Blogger...

HeadLines

Recent Posts Widget | Webaholic